கடந்தகாலத்தை தவிர

எத்தனை வலியிலும்
நகர்கிறது வாழ்க்கை

முந்தைய வலிகளையும்
நேற்றைய கண்ணீரையும்
இன்றைய புன்னகை
எப்படியோ
மறைத்து விடுகிறது

அடுத்த வேளை உணவுக்கும்
நிச்சயமற்ற வாழ்வில்
நாளைய விழிப்பென்பதும்
கேள்விக்குறியே !

உண்பதும் உறங்குவதுமாய்
கழியும் காலத்தில்
எதை பதிவு செய்தோம்
கடந்த காலத்தை தவிர...

இருந்தும் எதற்கோ
இந்த வாழ்க்கை
எதை நோக்கியோ
நகர்ந்துகொண்டு...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக