ஒற்றை வரிகூட
எழுவதில்லை...
ஊருக்கு சென்ற பின்
அதிகாலை தரும்
அம்மாவின் தேநீர்
அலுப்புகளையும் சுகமாக்கி
எழுப்புகிறது
பிரிவு செய்திகளை
பிரியமுடன் கேட்கும் அப்பா
இறக்கி விடுகிறார்
நீண்ட நாளைய கனங்களையும்
சுவர்களுக்குள் அடைபடாத
காலைக்கடன்கள்
ஆற்று மீன்களோடு
ஆனந்தமாய் நீந்துகிறது
திசையெங்கும்
அறிந்த முகங்களின்
அன்பு தழுவலில்
அடைப்புகள் உடைபட்டு
அருவியாய் பெருகுகிறது
அன்பு வெள்ளம்
நகரத்து வறுமையும்
தனிமையின் சூன்யமும்
கிராமத்து மயானத்திலும்
காணக் கிடைப்பதில்லை
விடுமுறை திர்ந்தபின்
விடியும் முன் கிளம்பி
அம்மாவின் அறிவுரைகளோடு
பேருந்தின் இருக்கைபிடித்து
உறக்கத்தோடே அமர்ந்தாலும்
உள்ளிருந்து எழுகிறது
ஒற்றை வரியேனும்...
1 கருத்துகள்:
சுவர்களுக்குள் அடைபடாத
காலைக்கடன்கள்
ஆற்று மீன்களோடு
ஆனந்தமாய் நீந்துகிறது]]
எதார்த்தம் - நிதர்சணம்.
கருத்துரையிடுக