திசை மறந்த பட்டாம்பூச்சியாய் திசையெட்டும் முட்டுகிறேன்...
நீ கொடுத்த பரிசொன்றை
வீட்டில் சென்று பிரித்து பார்த்தேன்
அதில் செயற்கை இதயம் ஒன்று
'நான் உன்னை காதலிக்கிறேன் '
'நான் உன்னை காதலிக்கிறேன் ' யன
சொல்லிக்கொண்டே இருக்கிறது ...
நீ மட்டும் தான்
என்னை காதலிக்கிறாய் என நினைத்தேன்
அனால் ,
நீ தரும் பரிசுகள் கூட
என்னை காதலிக்கின்றன .
எப்போதும் சாத்தியே கிடக்கிறது
நகரத்தின் கதவுகள்
செய்தி தாளுக்கோ பால் பாக்கெட்டுக்கோ
திறக்கப்படும் அவை
சட்டென அறைந்து சாத்தப் படுகிறது
எவர் முகத்திலாவது .
சக்கரை அரிசி என
உறவை எடுத்து செல்லும்
டம்பளர்கள் இங்கு
எவரிடமும் இல்லை .
தொலைகாட்சி சிறப்பு
நிகழ்ச்சிகளால் மட்டுமே
அடையாளப்படுகிறது ,
இனிப்பை பரி மாரிக்கொல்லாத
இவர்களின் பண்டிகைகள் ...
எப்போதாவது ஒலிக்கும் அழைப்புமணி
கடிதங்களுடனோ எரிவாயு வுருளையுடனோ
உறவு தவிர்த்த எதனுடனும்
காத்து நிற்கிறது ....
கூப்பிட்ட குரலுக்கு
ஊர் கூடிய தெருக்களில்
கான்கிரிட் சுவர்கள் முளைத்து
சிறையாகிவிட்டன இதயங்கள்
நகரத்தின் கதவுகளுக்குள் .
நான்,
அதிகம் சுற்றுகிற கோவிலாகவும்
அதிகம் வேண்டுகிற தெய்வமாகவும்
இருக்க முடிகிற உன்னால்
ஏன் வரங்களை மட்டும்
தாரளமாய் தரமுடிவதில்லை ....
உன்னை முதலில் பார்த்தபோது
சிற்பம் என நினைத்தேன்...
பின்புதான் தெரிந்தது
நீ சிற்பமல்ல சிற்பி ,
எனை ஒவ்வொருநாளும் செதுக்குகிறாய்...