எனதாய் இல்லை
என் வாழ்வின்
எந்த நொடியும்...
ஏதோவொரு முகமூடிக்குள்
எப்போதும் நான்
ஒரு கைதேர்ந்த
நடிகனைப்போல்
எல்லா சுழலிலும்
என்பங்கை மிகச்சரியாய்
பூர்த்தி செய்கிறேன்
உள்ளுக்குள்
துரத்தி கொண்டே இருக்கிறது
காரணமற்ற ஏதோவொரு பயம்
யாருமற்ற தனிமைகளில்
என்னோடு பேசும்
என் சுயம் சொல்கிறது...
எச்சரிக்கையாய் இரு
"இங்கு
உன்னைப்போல் பலர் உண்டு !"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக