உனக்காக நான் எதையும் செய்வேன்
என்றாலும் ,
எதைநான் செய்வது ...
எதை செய்தாலும்
உனக்கு வலிக்கிறதே !


ஒருவேளை நான் உன்னை
காதலித்திருக்கா விட்டால்
துன்பங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்
ஆனால் இப்படி
துணாக இல்லாமல்
துரும்பாகவே இருந்திருப்பேன் .
அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்ன செய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் காயும்முன்
எதாவது செய்ய வேண்டும் .
வேர்க்காத முகத்தை கூட
அடிக்கடி துடைத்து கொள்கிறேன் ...
நீ கொடுத்த கைக்குட்டை என்பதால் .
உன்னை காதலிக்க துவங்கியது முதல்
என் அழகு கூடிக்கொண்டே வருகிறது
என்றாலும் ,
எனக்கு அதில் வருத்தம் தான்
எப்போதும் என்னை விட
நீயே அழகாய் இருக்க வேண்டும் .
குறும்பு செய்யும் போதெல்லாம்
நீ செல்லமாய் அடிக்கிறாய்
உன்னிடம் செல்லமாய் அடிவாங்கவே
நான் குறும்புகள் செய்கிறேன் ...

நீ கொடுத்த பரிசொன்றை

வீட்டில் சென்று பிரித்து பார்த்தேன்

அதில் செயற்கை இதயம் ஒன்று

'நான் உன்னை காதலிக்கிறேன் '

'நான் உன்னை காதலிக்கிறேன் ' யன

சொல்லிக்கொண்டே இருக்கிறது ...

நீ மட்டும் தான்

என்னை காதலிக்கிறாய் என நினைத்தேன்

அனால் ,

நீ தரும் பரிசுகள் கூட

என்னை காதலிக்கின்றன .

உன் விரலில் வைத்த மருதாணியை
எடுத்து எறிந்து விட்டு நீயோ
விரலை பார்த்து கொண்டிருக்கிறாய் ...
நானோ,
நீ எடுத்து எறிந்த மருதாணியை
பார்க்கிறேன் ...
உன் விரல் பட்டு அது சிவந்து உள்ளதா என .