உனக்காக நான் எதையும் செய்வேன்
என்றாலும் ,
எதைநான் செய்வது ...
எதை செய்தாலும்
உனக்கு வலிக்கிறதே !
ஒருவேளை நான் உன்னை
காதலித்திருக்கா விட்டால்
துன்பங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்
ஆனால் இப்படி
துணாக இல்லாமல்
துரும்பாகவே இருந்திருப்பேன் .
திசை மறந்த பட்டாம்பூச்சியாய் திசையெட்டும் முட்டுகிறேன்...
நீ கொடுத்த பரிசொன்றை
வீட்டில் சென்று பிரித்து பார்த்தேன்
அதில் செயற்கை இதயம் ஒன்று
'நான் உன்னை காதலிக்கிறேன் '
'நான் உன்னை காதலிக்கிறேன் ' யன
சொல்லிக்கொண்டே இருக்கிறது ...
நீ மட்டும் தான்
என்னை காதலிக்கிறாய் என நினைத்தேன்
அனால் ,
நீ தரும் பரிசுகள் கூட
என்னை காதலிக்கின்றன .