உன்னைப் போல் ...

கடைசியாய் நீ தந்த
காதல் கடிதத்தையும்
கிழித்தெறிந்து விட்டேன்

உன் நினைவுகளும்
மெல்ல மெல்ல
இதயத்தை விட்டு
வெளி நடப்பு செய்தன

உன் மிதான என் காதலும்
ஒரு அதிகாலை கனவாய்
நடக்கும் என்ற ஆசையோடு முளைத்து
நடக்காமலே கானலாகி விட்டது

மீண்டும் மீண்டும்
நினைவு கூர்ந்தும்
அதன் பக்கங்களை முழுவதுமாய்
என்னால் வரைய முடிய வில்லை

உன்னை போல
நானும் பழகிகொண்டேன்
வந்தவளிடம் சிரித்து பேசவும்
இரவில் புன்னகையோடு
என்னை பகிர்ந்து கொள்ளவும் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக