வெளிவராத கவிதைகள்

ஒரு விழா முடித்து
மறு விழா செல்வதற்குள்
கருத்து போகும் நகைகள்
குறித்து
அம்மாவின் கவலை .

எங்கோ சந்தையில்
எதிர்பட்ட
தன் பால்ய சிநேகிதன்
அணிந்து வந்த
ஐவிரல் மோதிரமும் வண்டியும்
அப்பாவின் தூக்கத்தை பறித்தது .

தங்கைக்கு
தலைமுடி உதிர்வது குறித்த
வருத்தம் .

வெளி வராத
என் கவிதைக்காக
நான்தான் வருந்த வேண்டும் ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக