இயற்கை வாசிகள்

அத்தனை சத்தத்திலும்
எப்படியோ உறங்கி விடுகிறார்கள்
சாலை வாசிகள்

எந்த
மென் படுக்கை விரிப்பும்
போர்வையும்
அவர்களின்
தேவையாய் இல்லை

மின் விசிறிகளை நாடாத
அவர்களின் தூக்கம்
மிகவும் எளிதாய் உள்ளது

மழை ,வெயில் யன
வாழ்வின் எந்த கணத்தையும்
மிகச் சாதாரண மாக
எதிர் கொள்கிறார்கள்

எந்த மின்சாரத்தாலும்
துண்டு படுத்த முடிவதே இல்லை...

அவர்களின் கனவை .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக