இதயக் கோளாறு

கூரைல்
கூடு கட்டும்
குருவிகள் கேட்பதில்லை
வீட்டுக்காரனின் சாதியை

சங்கங்கள் ஏதுமற்ற
காக்கைகள் உண்கின்றன
பிடி சோற்றையும்
பங்கிட்டு

கோபுரத்தில் அடங்கி
தேவாலயத்தில் அமர்ந்து
பள்ளிவாசலில் பருக்கை உண்ணும்
புறாக்களுக்குள் எந்த
சண்டையும் இல்லை

கணேசனின் கண்கள்
பீட்டருக்கும்
முருகனின் ரத்தம்
முகமதுக்கும்
பொருந்திய பிறகும்
பொருந்த மறுக்கிறது

சிலரது இதயம் மட்டும் ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக