பொம்மைகளோடு

அன்னையின் முந்தானைப்பற்றி
உறங்கிய என் இரவுகள்
முத்தங்களோடு விடியும் ,

தாத்தாவின் கொஞ்சல்களும்
அத்தைகளின் கேலிகளும்
எனக்கு சிறகுகளை
பூட்டி விடும் ,

மாமாவின் கரம் பற்றி
தெருவில் வலம் வருவேன் ,

குரங்குக்கோ நாய்க்கோ
தரும் முன்னே
எல்லா சோற்றையும்
நானே உண்பேன் ,

பாட்டியின் கதைகளே
எனை தாலாட்டி
உறங்க வைக்கும் .

எல்லாம் ஒரு கனவுப்போல்
ஓடி மறைகிறது
இன்று ,
நகரத்தின் இந்த
நாலு சுவற்றுக்குள் நான் ...

என் குழந்தை விளையாடுகிறான்
பொம்மைகளோடு ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக