பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு எல்லாமே
பொருளாலாகி விட்டது

அன்பையும் உறவுகளையும் கூட
பொருள்களே திர்மானிக்கின்றன

பொருளற்ற உயிர்களை
இங்கு எவரும்
பொருட்படுத்துவதில்லை

பொருளோடு உறங்கி
பொருளோடு விழித்து
பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு வாழ்க்கை என்பதே பலருக்கு
பொருள் தேடி அலையும் போராட்டம் .

4 கருத்துகள்:

பாலா சொன்னது…

உங்கள் எல்லா கவிதைகளையும் படித்தேன்
மெல்லிய சோகம் கலந்து அருமை இனியவன் சார்

பா. இனியவன் சொன்னது…

நன்றி பாலா ,தொடர்ந்து விமர்சியுங்கள்

S.A. நவாஸுதீன் சொன்னது…

பொருள் இல்லாதான் அந்நியன் மட்டுமல்ல அடையாளம் இல்லாதவன் ஆகிவிடுகிறான் இந்த கலியுகத்தில்.

பா. இனியவன் சொன்னது…

நன்றி நவாசுதின் .. தொடர்ந்து கருத்து சொல்லுங்க ..

கருத்துரையிடுக